Movie: Aayirathil Oruvan (2010)
Music: G. V. Prakash kumar
Lyricists: Selvaraghavan
Singers: Andrea Jeremiah and G. V. Prakash Kumar
Added Date: Feb 11, 2022
பெண்: மாலை நேரம் மழைத்தூரும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன் நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன்
பெண்: ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
பெண்: ஓ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் அன்பே இதம் தருமே
பெண்: உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்
பெண்: காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது
பெண்: ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என..
பெண் மற்றும்
ஆண்: ஓ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம்
பெண்: அன்பே. இதம் தருமே
பெண்: ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன
பெண்: இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன இரு திசைப்பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன
பெண்: என் தேடல்கள் நீ இல்லை உன் கனவுகள் நான் இல்லை இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன
பெண்: ………..
பெண்: மாலை நேரம் மழைத்தூரும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன் நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன்
பெண்: ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
பெண்: ஓ காதல் இங்கே ஓய்ந்தது ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது முடிந்தது தேடும் போதே தொலைந்தது அன்பே அன்பே அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் அன்பே {இதம் தருமே}.(2)